கடந்த வெள்ளிக்கிழமை ஒரு ஸ்பெஷல் பார்ட்டியை தனது வீட்டிலேயே ஒழுங்கு செய்தார் விஜய். இந்தப் பார்ட்டியில் படம் சம்பந்தப்பட்டவர்களுடன் பாக்யராஜும் கலந்து கொண்டார். இதற்காக ஸ்பெஷல் கேக் தருவிக்கப்பட்டிருந்தது. சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா என்று அதில் எழுதப்பட்டிருந்தது என்பது கேக்கை சுவைத்தவர்கள் சொன்ன செய்தி.
மோகன்லாலும் குஷியுடன் இந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டார். கேரளாவில் கோடிகளை அள்ளிய மகிழ்ச்சி அவருக்கு. ஆக எல்லோரையும் இன்புற்றிருக்க வைத்திருக்கிறது ஜில்லா.