இசை நாய‌கி 125வது நப‌ர் - எ‌ஸ்.ஜே. சூ‌ர்யா

வெள்ளி, 17 ஜனவரி 2014 (17:16 IST)
FILE
கிட்டத்தட்ட படம் ஆரம்பித்து சில வருடங்கள் முடிந்தும் இன்னும் முடிக்காமல் இசை படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா.

அவரிடம் இசை எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டால்... இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம். அதனால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறேன்.

கதை தயார் செய்து அதற்கான இடங்களை தேர்வு செய்வதற்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டது. கொடைக்கானலில் ஒரு சர்ஜ் செட்டு போடுவதற்கே பல மாதங்களானது. அதில் ஆறு மாதங்கள் படப்பிடிப்பு நடத்தினேன்.

மேலும், இசையை கற்றுக் கொள்வதற்காக ஆறு மாதங்கள். எடிட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌சன் வேலைகளுக்காக சில மாதங்கள் என காலங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

124 பேருக்குப் பின்னால் சாவித்ரி என்ற பெண்ணை நாயகியாக தேர்வு செய்தேன். தற்போது எல்லாம் முடியும் தருவாயில் இருக்கிறது. விரைவில் வெளிவரும் என் இசை என்கிறார் சூர்யா.

வெப்துனியாவைப் படிக்கவும்