கொஞ்ச நாட்களாக தனது உடல் மீது அக்கரை செலுத்த ஆரம்பித்து விட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். எத்தனை வேலை இருந்தாலும் தினம் ‘ஜிம்’முக்கு போவதை தவிர்ப்பதில்லை. அவ்வப்போது நடை பயிற்சியும் செய்து வருகிறார்.
FILE
அத்தோடு, உணவில் அதிகம் காய்கறிகள் எடுத்துக் கொள்வதோடு, அரிசி சாதத்தை சாப்பிடுவதில்லையாம். காரணம் அடுத்து, அதிரடியான ’ஆக்ஷன்’ கதைகளை தேர்வு செய்து வருகிறார்.
காமெடியான படங்களில் எவ்வளவு காலத்துக்குத்தான் நடித்துக் கொண்டிருப்பது. காமெடி ஹீரோவை விட, ஆக்ஷன் ஹீரோக்களுக்குத்தான் அதிக மரியாதை. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக நானும் அதிரடி களத்தில் இறங்கப்போகிறேன்.
FILE
அதற்கான முதல் படிதான் ‘மான் கராத்தே’. அதனால்தான் இந்த திடீர் உடற்பயிற்சி. அப்போதுதானே எகிறி, பறந்து சண்டை போடமுடியும்’ என்று தெளிவாக முடிவெடுக்கிறார் சிவகார்த்திகேயன்.