வீரத்திற்குப் பிறகு மகாபலி - தமன்னாவின் எதிர்பார்ப்பு!
புதன், 15 ஜனவரி 2014 (09:46 IST)
வீரம் படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்த தமன்னா படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதையடுத்து மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.
FILE
இதனால் அடுத்து நடிக்கும் இருமொழித் திரைப்படமான மகாபலி என்ற படத்த்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார் தமன்னா.
தமிழகத்தில் சக்கைப் போடுபோட்ட நான் ஈ படத்தை இயக்கைய ராஜ மௌலி மகாபலியை இயக்கியிருக்கிறார்.
FILE
இதில் தெலுங்கு நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
பெரிய பட்ஜெட் படமான மகாபலியிலும் நடிப்பது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய தமன்னா ஒரு படத்திற்கு கையெழுத்திடும் முன்னர் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி மட்டுமே தான் யோசிப்பதாகக் கூறினார்.