அஜீத்தின் வீரம் படத்திற்கு, நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர்கள் அஜீத், விஜய் இருவரது படங்கள் ஒன்றாக இந்த பொங்கலுக்கு ரிலீஸாகியுள்ளது. கடந்த 10ம் தேதி இவர்கள் இருவரது படங்களான வீரம் மற்றும் ஜில்லா ரிலீஸாகின.
FILE
இரண்டு படங்களும் தியேட்டர்களில் பட்டையை கிளப்பி, வசூலையும் குவித்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஜில்லா படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது. பிரஸ்மீட்டில் நடிகர் விஜய், இயக்குநர் எஸ்.டி.நேசன், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், பொதுவாக நான் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை. ஆனால் ஜில்லா படம் ரிலீசான அன்று எனது ரசிகர்கள் தற்போது நிலவி வரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கட்-அவுட் அலங்காரம், அப்படி, இப்படி என்று அமர்க்களப்படுத்திவிட்டனர்.
FILE
இதுதொடர்பான வீடியோவை எனது நண்பர்கள் என்னிடம் காண்பித்தனர். அதற்காகவும், ஆர்.பி.செளத்ரி சார் அவருக்காகவும் தான் நான் இங்கு வந்தேன். இப்படம் வெற்றி பெற்றதற்காக ரசிகர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தில் என்னுடன் நடித்த மோகன்லால், காஜல் அகர்வால், சூரி ஆகியோருடன் இப்படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். மேலும் ஜில்லா படத்தோடு வீரம் படமும் ரிலீஸாகியுள்ளது. வீரமும் சிறப்பாக வந்திருப்பதை அறிந்தேன். அஜீத்துக்கும், அப்படத்தின் இயக்குநர் சிவாவுக்கும் எனது வாழ்த்துக்களை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன் என்றார்.