மோகன் பாபுவை இயக்கும் ராம் கோபால் வர்மா

திங்கள், 13 ஜனவரி 2014 (17:32 IST)
FILE
சத்யா 2 படத்தை இயக்கிய ராம் கோபால் வர்மா அடுத்து ர‌ஜினியின் நெருங்கிய நண்பர் மோகன் பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

வெற்றியோ தோல்வியோ... நான்கு மாதத்துக்கு ஒரு படம் இயக்கிவிடுவார் வர்மா. முடிந்தால் வாரத்துக்கு ஒன்றுகூட இயக்குவேன் என்று முன்பு ஒருமுறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஹிந்தியில் சத்யா 2 படத்தை இயக்கியவர், தெலுங்கில் சர்வானந்தை வைத்து அதே கதையை ஒரே நேரத்தில் இயக்கினார். தமிழில் படத்தின் பெயர் நான்தாண்டா.

இந்தப் படத்துக்குப் பிறகு மோகன் பாபு நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்குவதாக தெ‌ரிவித்துள்ளார் வர்மா. மோகன் பாபுவின் மகன் மனோ‌ஜ் மஞ்சுவும் படத்தில் நடிக்கிறார். இருவரும் அப்பா, மகனாக நடிப்பது ஹைலைட்.

ராயலசீமா பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. இதற்குமுன் ப‌‌‌ரி‌ட்டால ரவியின் கதையை ரத்த ச‌‌ரித்திரம் என்ற பெய‌‌ரில் வர்மா எடுத்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்