குடியின் தீமைகள்

திங்கள், 13 ஜனவரி 2014 (15:51 IST)
கிராமத்தில் குடித்து விட்டு அலப்பரை செய்து கொண்டு திரியும் சில இளைஞர்களின் குடிவெறியால், அங்கு தஞ்சமடையும் ஒரு இளம் காதல் ஜோடி எந்த அளவுக்கு சீரழிகிறார்கள் என்பதை ஆழமாக விவரிக்கும் படம்தான் ஊர் சுற்றி பறவைகள்.

கண்டிப்பாக இந்தப் படத்திற்குப் பின் குடிக்கும் இளைஞர்கள் சிலராவது திருந்துவார்கள். அந்த அளவுக்கு காதல் கலந்த விழிப்புணர்வு படமாக எடுத்திருக்கிறோம் என்று கூறுகிறார் படத்தின் இயக்குனர் ஆர்.தண்டபாணி.

இப்படத்துக்கான ஒளிப்பதிவை ஆர்.பார்த்திபன் கவணிக்கிறார். இசை: சரத் பிரியதேவ். வசனம்: ஆர்.எஸ். பாலமுருகன். இதில் தில்லை மணி, மைதிலி, சுனில்குமார், சரக்கு குமார், கவிக்குமார் என முற்றிலும் புதுமுகங்களை வைத்து தயாராகி வரும் இப் படத்தை தனது ஜோஸ்வா மூவி மேக்கர்ஸ்காக ரத்தினவேல்பாண்டியன் தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்