ரத்த கண்ணீரை தந்த திருவாரூர் தங்கராசு மரணம்

திங்கள், 6 ஜனவரி 2014 (20:49 IST)
FILE
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ரத்த கண்ணீர் படத்தின் கதை, வசனத்தை எழுதியவருமான திருவாரூர் தங்கராசு மரணமடைந்தார். அவருக்கு வயது 87.

திராவிட இயக்கம் பெரிய பாரம்பரியத்தை கொண்டது. திராவிட இயக்கம் என்பது கருணாநிதியும், அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஆகியோரை மட்டுமே உள்ளடக்கியது என்று தவறாக புரிந்து கொண்ட சில்வண்டுகள் திராவிட இயக்கம் என்றாலே வெறுப்பை கக்கி வருகின்றனர். ஆனால் நியாயத்துக்கு போராடும் நாலு கருப்புச் சட்டைக்காரர்கள் இன்றும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கவே செய்கிறார்கள்.

அப்படி பெரியாரின் கொள்கைகளில் பிடிப்புடன் வாழ்ந்த மறக்க முடியாத மனிதர்களில் ஒருவர் திருவாரூர் தங்கராசு. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ரத்த கண்ணீர் படத்தின் கதை, வசனத்தை எழுதியவரும் இவரே.

87 வயதாகும் திருவாரூர் தங்கராசு சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலி.

வெப்துனியாவைப் படிக்கவும்