தலைமுறைகள் குறித்த உரையாடல்

வெள்ளி, 3 ஜனவரி 2014 (20:30 IST)
பாலுமகேந்திராவின் தலைமுறைகள் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. விமர்சகர்கள் என்று குறிப்பிட காரணம், படத்தை அவர்கள் மட்டுமே பார்த்துள்ளனர். நல்ல படங்களை பார்ப்போம், ஓட வைப்போம் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வீரம் பேசும் பொதுஜனம் படத்தை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவர்களை சுவாரஸியப்படுத்தும் அம்சங்கள் இந்த முதிர்ந்த கலைஞனின் நல்ல படத்தில் இல்லை.
FILE

வாரந்தோறும் திரைப்படங்களை திரையிடுவது, விமர்சனக் கூட்டங்கள் நடத்துவது என சென்னை கலையார்வலர்களின் விருப்பத்துக்கு‌ரிய இடமாக பனுவல் புத்தக விற்பனை நிலையம் மாறியிருக்கிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை (05-01-14) பாலுமகேந்திராவின் தலைமுறைகள் திரைப்படம் குறித்த கலந்துரையாடலுக்கு பனுவல் ஏற்பாடு செய்துள்ளது.

மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த கலந்துரையாடலில் அம்ஷன் குமார், ரோகிணி, ராஜ சுந்தர்ராஜன், பொன்.சுதா, சுப.குணராஜன், இரா.தெ.முத்து ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இதில் நீங்களும் கலந்து கொண்டு கருத்துகளை தெ‌ரிவிக்கலாம். அனுமதி இலவசம்.

வெப்துனியாவைப் படிக்கவும்