செந்தட்டிக்காளை பெயர் மாறுகிறது...?

வெள்ளி, 3 ஜனவரி 2014 (14:03 IST)
அசல் படத்துக்குப் பிறகு சில வருட இடைவெளி எடுத்துக் கொண்ட இயக்குனர் சரண் செந்தட்டிக்காளை செவத்தகாளை என்ற படத்தை அறிவித்தார். வினய் இரு வேடங்களில் நடிப்பதாக சொல்லப்பட்ட இப்படம் குறித்து விளம்பரங்களும் தரப்பட்டது. பிறகு இந்த காளைகள் குறித்து எந்த தகவலும் இல்லை.

இ‌ன்று (03-01-14) ஹைதராபாத்தில் சரண் புதிய படம் ஒன்றை தொடங்குகிறார். இதிலும் வினய்தான் ஹீரோ. சமுத்‌ரிகா, ஸ்வாசிகா, கேஷா என மூன்று நாயகிகள். மூவரும் அறிமுகங்கள். வினய்க்கு இரு வேடங்கள்.

முன்பு அறிவிக்கப்பட்ட அதே செந்தட்டிக்காளை செவத்தகாளை படம்தான் இது. அறிவித்து வருடம் ஒன்று ஓடிவிட்டதால் படத்துக்கு வேறு பெயர் சூட்ட சரண் விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்தப் புதிய படத்துக்கு பரத்வா‌ஜ் இசையமைக்கிறார். சரண் மூவி ஃபேக்ட‌ரி சார்பில் சரணே இந்தப் படத்தை தயா‌ரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்