புலியாமணியான ப்ரியாமணி

வெள்ளி, 3 ஜனவரி 2014 (11:51 IST)
புலியை தூரத்தில் பார்த்தாலே இதயம் தூக்கியடிக்கும். பக்கத்தில் சென்று புலியை மடியிலும் படுக்க வைத்தால்...? கேட்கவே கிறுகிறுவென்றிருக்கும் இந்த சாகசத்தை அசட்டையாக செய்துவிட்டு வந்திருக்கிறார் ப்ரியாமணி.
FILE

புத்தாண்டு கொண்டாட குடும்பத்துடன் ப்ரியாமணி சென்றது பாங்காக். அப்போது அங்குள்ள புகழ்பெற்ற புலி கோயிலுக்கும் சென்றுள்ளார். புலிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் அந்த கோயிலில் வளர்ந்த புலி ஒன்றை மடியில் படுக்க வைத்து போட்டோவும் எடுத்துள்ளார்.
FILE

என்னதான் கோயில் புலி, கடிக்காது என்றாலும் அருகில் செல்லவே துணிச்சல் வேண்டும். ப்ரியாமணி மடியில் படுக்க வைத்து ஆராரோவே பாடியிருக்கிறார் என்றால் அவரது துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்