தமிழுக்கு புது வரவு

செவ்வாய், 31 டிசம்பர் 2013 (12:21 IST)
பி.ஈ. பட்டதாரியான நேகா பாட்டீல் ஒரு ஊர்ல படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமாகியிருக்கிறார். நல்ல கதை, முக்கியத்துவம் வாய்ந்த, பிடித்தமான கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் இவரின் எதிர்பார்ப்பு.
FILE

கதைக்கும் காட்சிக்கும் கண்டிப்பாக அவசியம் என்றால் கிளாமர் காட்டுவதில் தப்பில்லை என சினிமாவை அழகாக புரிந்து வைத்திருக்கிறார். அத்தோடு தனக்கு பிடித்தமான, சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நாயகன் சூர்யாதானாம். மேலும், தான் தைரியசாலியான பெண் என்பதால் விஜயசாந்தி போன்ற ஆக்‌ஷன் படங்கள் என்றாலும் தயங்காமல் நடிப்பேன் என்கிறார்.

பரத நாட்டியத்தை முறைப்படி பயின்றிருக்கும் இவர் தரும் டிப்ஸ் பச்சை காய்க‌றிகளை அதிகமாக எடுத்து கொள்ளுங்கள். உடலுக்கு தேவையான எல்லா சத்தும் அதில் இருக்கிறது என்கிறார் நேகா.

வெப்துனியாவைப் படிக்கவும்