முன்பு சிம்பு இப்போது சரத்குமார்.. மிஸ்கினுடன் இணைவோர் யார்?

திங்கள், 30 டிசம்பர் 2013 (11:58 IST)
FILE
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பெருமளவு பாராட்டைக் குவித்தாலும் சினிமாவை தீவிரமாக பார்ப்பவர்கள், விமர்சகர்கள் அதன் மீது கடும் விமர்சனங்களை வைத்தது பேஸ்புக் போன்ற ஆன்லைன் தளங்களில் புழங்குபவர்களுக்குத் தெரியும்.

ஆனாலும் பிசினஸ் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கவேண்டாமா? மிஸ்கினின் அடுத்த திரில்லர் ஸ்க்ரிப்ட் ரெடி என்கிறது சில வட்டாரங்கள்.

இந்த திரில்லர் ஸ்க்ரிப்டில் நடிக்கவிருப்பவர் சிம்பு என்று முன்பு அடிபட்டது. ஆனால் தற்போது சரத்குமார் நடிப்பார் என்கிறது வேறொரு செய்தி.

உண்மை நிலவரம் தெரியவில்லை. ஆனால் சரத்குமாரும் மிஸ்கினும் சந்தித்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால் சந்திப்பு எதன் நிமித்தமாக என்பது தெரியவில்லை.

இன்னொரு தரப்பு கூறுவது என்னவெனில் சிம்பு நடிப்பதாக வெளிவந்த த்ரில்லர் ஸ்க்ரிப்ட் வேறு சரத்குமார் நடிப்பதாகத் தெரியும் திரில்லர் ஸ்கிர்ப்ட் வேறு என்கிறது.

எது உண்மை என்பது தெரியவில்லை. இவையெல்லாம் புழங்கும் செய்திகள் அவ்வளவே.

வெப்துனியாவைப் படிக்கவும்