வளர்ந்து வரும் ஆதிதப்பு

ஞாயிறு, 29 டிசம்பர் 2013 (15:45 IST)
கோவில் திருவிழாக்கள் முதல் மரண வீடுகள் வரை தப்பு எனும் ஆதி இசை கருவியை வாசிக்கும் மக்களைப் பற்றிய படமாக உருவாகி வருகிறது ஆதிதப்பு என்ற திரைப்படம்.
FILE

தப்பு இசையை ரசிப்பவர்கள் கூட, அதை வாசிக்கும் மனிதர்களை மதிப்பதில்லை. ஆதிகாலத்திலிருந்து இன்று வரை தப்பு எனும் கருவி மனித வாழ்வில் பிணைந்து வந்திருக்கிறது.

அதை உலகுக்கு எடுத்துக் காட்டும் விதமாகத்தான் இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறோம். இதில் காதல், காமெடி, வீரம் என அனைத்து மக்களுக்கும் பிடிப்பதோடு, தப்பு கருவியின் மேலும், அதை இசைப்பவர்கள் மீதான பார்வையும் மாறும். மொத்தத்தில் வெற்றிப் படத்துக்கு தேவையான அத்தனை சுவாரசியங்களையும் சேர்த்திருக்கிறோம். என்கிறார் இப் படத்தின் இயக்குனர் சி.க.கருணாநிதி. எஸ்.ஆர்.குமாரின் ஒளிப்பதிவில், ஜீவன் மயில் இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்