புரியாத புதிர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ். ரவிக்குமார். அதை தொடந்து சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன் . நாட்டாமை. சூப்பர் ஸ்டார் நடித்த முத்து. படையாப்பா.கமல் நடித்த அவ்வை சண்முகி விஜய் நடித்த மின்சார கண்ணா என ரவிக்குமார் திரைத்துறைக்கு வந்த கடந்த 25 ஆண்டுகளில், அவர் இயக்கிய மொத்தம் 37 படங்களில், பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.
FILE
அப்படிப்பட்ட சாதனையாளரை பாராட்டும் விதமாக, சென்னையில் மிகப் பெரிய விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த விழாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல ஹீரோக்கள் மற்றும் சினிமா ஜாம்பவான்கள் கலந்து கொண்டு கே.எஸ்.ரவிக்குமாரை பாராட்டி வாழ்த்தவுள்ளனர். இந்த விழா வரும் ஜனவரி-4 ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.