மீடியாவை சாடும் த்ரிஷா

புதன், 25 டிசம்பர் 2013 (15:02 IST)
என் மீது மீடியாக்களுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. ஏதாவது அவதூரு பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
FILE

சமீபத்தில் வேலூருக்கு அருகில் இருக்கும் ஆரணியில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவுக்கு சென்றேன். அங்கிருந்து தங்கக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று சென்றேன். இவ்வளவுதான் நடந்தது.
ஆனால், மீடியாக்கள் த்ரிஷா நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டியும், 2014-ஆண்டில் திருமணம் அமைய வேண்டும் என்றும் விஷேச அபிசேக ஆராதனை செய்துவிட்டு சென்றதாக புரளியை பரப்புகிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை.

எனக்கும் விரைவில் திருமணம் நடக்கும். அனைத்து மீடியாக்களையும் முறைப்படி அழைப்பேன். அதற்குள் தேவையில்லாமல் இப்படி எதுவும் பரப்பவேண்டாம் என்கிறார் கொஞ்சம் காட்டமாகவே.

வெப்துனியாவைப் படிக்கவும்