இரு மொழிகளில் சிம்பு, நயன் படம்

ஞாயிறு, 22 டிசம்பர் 2013 (15:59 IST)
சிம்பு, நயன்தாரா இணையும் பாண்டிராஜின் புதிய படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிறது.
FILE

ஒருகாலத்தில் காதலர்களாக இருந்து பிரிந்த சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் இணைவதால் பாண்டிராஜின் படம் ஒரே இரவில் தலைப்பு செய்தியானது. படத்தின் கதை, கேரக்டர் எதையும் அறிந்து கொள்ளாமல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காகவும், திரையரங்கு விநியோக உரிமைக்காகவும் முட்டி மோதுகிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியது. ஆனால் புத்தாண்டில்தான் நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். 06-01-14 அன்று அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது. அதன் பிறகே சிம்புடனான காம்பினேஷன் காட்சிகளை எடுக்கிறார்கள்.

இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. தமிழில் நடிப்பவர்கள்தான் தெலுங்கிலும். காமெடியன் விஷயத்தில் மட்டும் மாற்றம். தமிழில் சூரி என்றால் தெலுங்கில் சூரிக்குப் பதில் ராஜேஷ்.

சிம்பு தம்பி குறளரசன் படத்துக்கு இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்