பாந்த்ரா பகுதியை காலி செய்யும் ஸ்ருதிஹாசன்

ஞாயிறு, 22 டிசம்பர் 2013 (14:58 IST)
பாந்த்ராவில் தற்போது குடியிருக்கும் வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு குடி போகிறார் ஸ்ருதிஹாசன்.
FILE

ஹிந்திப் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வந்ததால் மும்பை பாந்த்ரா பகுதியில் அபார்ட்மெண்ட் ஒன்றில் தனியாக பிளாட்டில் வசித்து வந்தார் ஸ்ருதி. இந்நிலையில் சென்ற மாதம் மர்ம நபரால் அவர் தனது வீட்டிலேயே தாக்கப்பட்டார். இந்த அதிர்ச்சியான சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பான பகுதியில் குடியேறும்படி பலரும் ஸ்ருதியை கேட்டுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தனது பாந்த்ரா வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு விரைவில் குடிபோகிறார் ஸ்ருதி.

தற்போது ஜான் ஆபிரஹாமின் வெல்கம் பேக் உள்பட இரண்டு ஹிந்திப் படங்களில் அவர் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


வெப்துனியாவைப் படிக்கவும்