செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) போட்டிகளை மும்பையில் சச்சின் டெண்டுல்கர் தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் போஜ்புரி நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பிப்ரவரி மாதம் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. முதல்நாள் போட்டி மும்பையில் நடக்கிறது. அதனை தொடங்கி வைக்கிறார் சச்சின்.
தமிழ் நடிகர்கள் விஷால் தலைமையிலான சென்னை ரைனோஸ் அணியில் விளையாடுகிறார்கள். இந்த அணியின் விளம்பர தூதுவராக நடிகை த்ரிஷா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நடிகர்களை மைதானத்தில் ஊக்குவிப்பதுதான் இவரின் வேலை. இதற்கு நல்ல சம்பளத்துடன் பல சலுகைகளும் தரப்படுகிறது.