நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம்

வியாழன், 19 டிசம்பர் 2013 (20:10 IST)
நியாயப்படி கண்டிக்கப்பட வேண்டியவர்கள் இயக்குனர் சுகுமார், நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்ட படக்குழுவினர். ஆனால் சமந்தாவுக்கு எதிராக கண்டனங்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் ஆந்திராவில்.
FILE

மகேஷ்பாபு சுகுமார் இயக்கத்தில் 1 நேநொக்கடையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கிருத்தி சனான் ஹீரோயின். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போஸ்டர்களில் ஒன்றில் கடற்கரையோரம் நடந்து சொல்லும் மகேஷ்பாபுவின் காலடித்தடங்களை நாய் மாதி‌ரி மண்டியிட்ட நிலையில் கிருத்தி சனான் பின் தொடர்வது போன்று புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் போஸ்டர் ஆந்திராவில் அதிர்ச்சி அலைகளை கிளப்பியுள்ளது. மகளிர் அமைப்புகள் தங்கள் கண்டனத்தை தெ‌ரிவித்துள்ளன.

நடிகை சமந்தாவும் தனது அதிருப்தியை ட்விட்ட‌ரில் பதிவு செய்திருக்கிறார். சமீபமாக ட்விட்டர் கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கி வருகிறார் சமந்தா. அவ‌ரின் ட்விட்டைப் பார்த்த மகேஷ்பாபுவின் ரசிகர்கள் சமந்தாவையும், சித்தார்த்தையும் திட்டி கமெண்டகள் போட்டவண்ணம் உள்ளனர்.

சினிமாவில் பெண்களை இரண்டாம்பட்சமாக கருதும் போக்கின், ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகதான் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்கு‌ரியது. சமந்தாவைப் போல சினிமாவில் உள்ளவர்களே இதனை கண்டிக்க முன்வர வேண்டும். அதுவே ச‌ரியான பதிலடியாகவும் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்