மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் அரவிந்த் சாமி

வெள்ளி, 29 நவம்பர் 2013 (11:14 IST)
FILE
கடல் படத்துக்குப் பிறகு நிறைய கதைகள் கேட்ட அரவிந்த் சாமி கடைசியில் மகேஷ் மஞ்ச்ரேக‌ரின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஹிந்தியில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு அரவிந்த் சாமி நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படம் தயாராகிறது. ஜனவ‌ரியில் படப்பிடிப்புக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

தமிழில் கதைகள் கேட்டு வருவதாகவும் விரைவில் தனது தமிழ்ப் படம் குறித்து அறிவிப்பு வரும் எனவும் அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.


வெப்துனியாவைப் படிக்கவும்