தமிழ் சினிமாவில் கதையைவிட படத்தின் தலைப்புக்குதான் அதிக டிமாண்ட். கார்த்தியையும் இந்தப் பிரச்சனை விட்டு வைக்கவில்லை.
காற்றடிக்கும் போதுதான் காசு பார்க்க முடியும் என்பதை தெளிவாகத் தெரிந்து சிறுத்தை மாதிரியான கமர்ஷியல் தாளிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அப்படியொரு மசாலா தாளிப்புதான் சகுனி. இந்தப் படம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மசாலா இயக்குனர் சுராஜின் இயக்கத்தில் சத்தமில்லாமல் நடித்து வருகிறார்.
சுராஜ், கே.எஸ்.ரவிக்குமார் பரம்பரையைச் சேர்ந்தவர். முப்பதே நாளில் இந்தி பாஷை மாதிரி மூன்றே மாதங்களில் முழுப்படத்தையும் எடுப்பவர். இவர்கள் படம் எண்பது சதவீதம் முடிந்துவிட்டதாம். ஆனாலும் நல்ல பெயர் படத்துக்கு அமையவில்லையாம்.