ஆந்திராவில் பாப்புலரான அனுஷ்கா தமிழுக்குதான் முதல் மரியாதை தந்திருக்கிறார். தெலுங்கில் ஒரேயொரு படத்தில் கமிட்டாகியிருக்கும் இவர் தமிழில் ஐந்துப் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
அனுஷ்கா தற்போது கார்த்தி ஜோடியாக சுராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுடன் நடிக்கும் இரண்டாம் உலகம் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. ஜனவரியில் விக்ரமுடன் தாண்டவம் படத்தில் நடிக்கிறார்.
மேலும், சூர்யா, அஜீத்துடன் தலா ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இத்துடன் ரஜினியின் கோச்சடையான் படத்திற்கும் அனுஷ்காவிடம் கேட்டுள்ளனர். அவர் இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை என்பது முக்கியமானது.