மீண்டும் மணிரத்னம் - இளையராஜா

வெள்ளி, 14 ஜனவரி 2011 (19:43 IST)
தளபதி வரை மணிரத்னத்தின் படங்களுக்கு உறுதுணையாக இருந்தது இளையராஜாவின் இசை. அதன் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டார். ஹாலிவுட்டில் பிஸியாக இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திய மணிரத்னத்துக்கு இசையமைக்க இதுவரை இசைப்புயல் மறுத்ததில்லை.

மணிரத்னம் அடுத்து பொன்னியின் செல்வன் கதையை படமாக்குகிறார். இந்தப் படம் ராஜராஜ சோழன் காலகட்டத்தை சார்ந்தது. தமிழின் தொன்மையான இசைக்கோவைகள் தேவைப்படும் படம். ரஹ்மானைவிட இளையராஜாவே இந்தக் கதைக்கு சாலப்பொருத்தமாக இருப்பார் என்பது சாதாரண ரசிகனும் அறிந்த ஒன்று.

மணிரத்னமும் அந்த முடிவையே எடுத்திருப்பதாக காதில் தேன் ஊற்றுகிறது அவரது அலுவலக வட்டாரம். விஷ்ணுபுரம், மத்தகம் என அற்புதமான ச‌ரித்திர கதைகள் எழுதிய ஜெயமோகன்தான் மணிரத்னத்தின் கதை இலாகாவை வழிநடத்துகிறார் என்பது கூடுதல் செய்தி.

வெப்துனியாவைப் படிக்கவும்