அடித்தாவது ரசிகர்களை அழ வைக்க வேண்டும் என்று கங்கணம்கட்டிதான் திரைக்கதை எழுதுவார் வசந்தபாலன். இந்த முறை அடிக்காமலே ஒருவரை அழ வைத்துள்ளார்.
வசந்தபாலன் தற்போது அரவானை இயக்கி வருகிறார். சரித்திரக் கதையான இதில் ஆதியும், பசுபதியும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் முக்கியமான வேடத்தில் நடிக்க பாய்ஸ் மணிகண்டனை ஒப்பந்தம் செய்திருந்தனர்.
திடீரென இவரை படத்திலிருந்தே தூக்கியிருக்கிறார் வசந்தபாலன். அரவான் படத்தில் நடிக்கும் எல்லோரையும் பயிற்சி என்ற பெயரில் சுளுக்கெடுத்திருக்கிறார் வசந்தபாலன். ஷங்கர் படத்துலேயே பயிற்சி இல்லாமதான் நடிச்சேன் என்று மணிகண்டன் மட்டும் பதுங்க, கெட்அவுட் சொல்லிவிட்டார் வசந்தபாலன்.