ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி

செவ்வாய், 27 ஜூலை 2010 (16:49 IST)
ஐங்கரன் தயா‌ரித்த படங்களான நந்தலாலாவும், களவாடிய பொழுதுகளும் எப்போது விமோசனம் கிடைக்கும் என காத்திருக்கின்றன. இந்த நெருக்கடியில் எப்படியோ தப்பிப் பிழைத்தவை பேராண்மையும், அங்காடித் தெருவும்.

சமீபத்தில் வெளியான அங்காடித் தெருவின் இயக்குனர் வசந்தபாலன் தனது அடுத்தப் படத்தை அறிவித்து ஷூட்டிங்கிற்கும் கிளம்பிவிட்டார். ஆனால் பேராண்மை ஜனநாதன்?

கதை என்ன, கதாநாயகன் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லையாம். இந்நிலையில் பாசிடிவ்வான சில தகவல்கள் தெ‌ரிய வந்துள்ளன.

பேராண்மைக்காக உடலை வருத்திக் கொண்ட ஜெயம் ரவியையே தனது அடுத்தப் படத்திலும் ஹீரோவாக தீர்மானித்திருக்கிறாராம் ஜனநாதன். படத்தை தயா‌ரிப்பவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். விரைவில் அதிகார‌ப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்