வாயால் கெட்ட தயாரிப்பாளர்

வெள்ளி, 20 மார்ச் 2009 (18:18 IST)
காரியத்துக்காக காலைப் பிடிப்பதும்... காரியம் முடிந்தால் காலை வாருவதும் சினிமாவில் மிகவும் சகஜமான ஒன்று. அப்படி விஜயகாந்தின் காலைப் பிடிப்பதுபோல் கெஞ்சி 'எங்கள் ஆசான்' படத்தில் நடிக்க விஜயகாந்திடம் ஒப்புதல் கேட்டார் எஸ்வி. தங்கராஜ்.

சம்பளம் வாங்காமல் நடித்தும் கொடுத்தார். படமும் முடிந்த நிலையில், விஜயகாந்தை மட்டம்தட்டி வேறு நடிகரை நடிக்க வைத்திருக்கலாமோ... என்றெல்லாம் பேசி வருகிறார்.

அத்தோடு விஜயகாந்த் பெயரைப் பயன்படுத்தி பல இடங்களில் பல லட்சங்கள் கடனும் வாங்கியுள்ளார். இதை கேள்விப்பட்ட கேப்டன், அந்த படம் எக்கேடோ கெட்டுப் போகட்டும், இனி அந்த ஆள் என் முகத்திலேயே விழிக்க வேண்டாம் என்று கோபப்பட்டிருக்கிறார்.

இதனால் தேதி அறிவிப்பு கொடுத்தும் படத்தை பிரிண்ட் போட காசில்லாமல் தவித்து வருகிறார் தங்கராஜ். அதுமட்டுமின்றி, விஜயகாந்த் கட்சி தேர்தலில் நிற்பதால் அவருடைய படமும் ரிலீஸ் செய்யக்கூடாது. வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வது என்பது இதுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்