நடிகைகளை எரிச்சலூட்டும் நடிகன்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:00 IST)
ஒத்துவராத நடிகைகளை கழட்டி விடுவதில் சிம்பு கில்லாடி. ஏற்கனவே 'கெட்டவன்' படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வாரம் ூட்டிங் முடிந்த பின் அவர் வேண்டாம் வேறு நடிகையை வைத்து ரீ ஷூட் பண்ணலாம் என்று சொல்ல... அந்தப் படமே வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார் பரதன் பிலிம்ஸ் திருச்சி ஆர். விஸ்வநாதன்.

அதன்பின் 'போடா போடி' என்றொரு படம் ஆரம்பிக்கப்படுவதாக செய்தி மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சிம்புக்கு ஜோடியாக நடிக்க, சரத்குமார் மகள் வரலட்சுமியை தேர்வு செய்தார். அதற்குள் சிலம்பாட்டம் பாதியில் நிற்பதால் அந்தப் படத்தை முடித்துவிட்டு போடா போடி ஆரம்பிக்கலாம் என்று வரலட்சுமியை காத்திருக்க வைத்தார்.

தற்போது சிலம்பாட்டம் வெளியாகியும்விட்டது. ஆனால், போடா போடியை ஆரம்பிக்காமல் கெட்டவன் படத்தை மீண்டும் ஆரம்பிக்க கையிலெடுத்திருப்பதால் கெட்டவன் முடிந்ததும் ஆரம்பிக்கலாம் என்று சொல்ல... கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டு வந்துவிட்டார். எப்படியும் கெட்டவன் முடிய இரண்டு வருடங்கள் ஆகும். அதுவரை இளமையை கயிறு போட்டா கட்டிவைக்க முடியும்...?

வெப்துனியாவைப் படிக்கவும்