ரூட்டை மாற்றும் தங்கர்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:19 IST)
அடுத்து யாரை வைத்து படம் இயக்குவது? ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் தங்கர்பச்சானை தூங்கவிடாமல் செய்யும் கேள்வி இது.

ஒன்பது ரூபாய் நோட்டு படத்துக்குப் பிறகும் இந்த‌க் கேள்வி அவரை ஆட்டிப்படைத்தது. இறுதியில் பிரபுதேவா தங்க‌ரின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

மகன் இறந்த துக்கம் மற்றும் படம் இயக்க குவியும் வாய்ப்புகள் ஆகியவற்றை முன்னிறுத்தி தங்க‌ரின் படத்திலிருந்து சில நாட்கள் முன்பு விலகினார் பிரபுதேவா.

இப்போது மீண்டும் அதே கேள்வி. யாரை வைத்து படம் இயக்குவது?

இந்த கேள்விக்கு விடை தெ‌ரியாத நிலையில் ஏற்கனவே இருக்கும் ஸ்கி‌ரிப்டுக்குப் பதிலாக பதினைந்து வருடங்களாக எழுதிவரும் தனது எமன் நாவலை படமாக்கலாமா என யோசித்து வருகிறாராம் தங்கர் பச்சான்.

சீக்கிரமாக முடிவெடுத்து நெறியாள்கையை தொடங்குங்கள் பச்சான்.

வெப்துனியாவைப் படிக்கவும்