ஓய்வெடுக்கும் த்‌ரிஷா, நயன்தாரா

செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:12 IST)
பையா படத்திலிருந்து விலகியதால் அந்தப் படத்தின் கால்ஷீட்டை சித்திக்கின் பாடிகாட் படத்துக்கு அளித்துள்ளார் நயன்தாரா. அடுத்து இவர் நடிக்கும் தமிழ்ப் படம் எது என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் மேலுமொரு மலையாளப் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் நயன்தாரா.

நயன்தாரா நிலைதான் த்‌ரிஷாவுக்கும். மர்மயோகி தள்ளிப் போனதால் அதற்கு கொடுத்த கால்ஷீட் அப்படியே கைவசம் உள்ளது. தமிழில் சர்வம் தவிர்த்து இவர் ஒப்புக் கொண்டிருக்கும் ஒரே படம், செல்வராகவன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம். இதுதவிர சீனு வைட்லி இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

படங்கள் இல்லாததால் நயன்தாரா கேரளாவில் ஓய்வு எடுத்து வருகிறார். அடுத்த வருட துவக்கத்தில் நண்பர்களுடன் ஆஸ்திரேலியாவுக்கு டூர் செல்கிறார் த்‌ரிஷா.

இவர்களின் வெற்றிடத்தை தமன்னாவும், ஸ்ரேயாவும் நிரப்பி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்