ரோகிணி அடித்த மொட்டை

செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:03 IST)
தீபா மேத்தாவின் வாட்டர் படத்துக்காக ஷபனா ஆஸ்மியும், நந்திதா தாஸும் மொட்டை அடித்துக் கொண்டது முன்பு பரபரப்பாக பேசப்பட்டது. இந்து அடிப்படைவாத அமைப்புகளால் வாட்டர் படப்பிடிப்பை இந்தியாவில் தீபா மேத்தாவால் நடத்த முடியாது போனதைத் தொடர்ந்து இருவ‌ரின் மொட்டையும் வீணானது.

மொட்டை அடிக்காமலே பிரபலமானவர் பத்மப்‌ரியா. மலையாள படத்திற்காக பத்மப்‌ரியா மொட்டை அடிக்க இருப்பதாக சிலர் கிளப்பிவிட்ட வதந்தி சில மாதங்கள் முன்பு கோலிவுட்டை ஆட்டிப்படைத்தது. ஆனால் இறுதிவரை பத்மப்‌ரியா மொட்டைக்கு மாறவில்லை.

ரோகிணியன் கதை இவற்றிலிருந்து மாறுபட்டது. நந்தலாலா படத்தில் மிஷ்கினின் அம்மாவாக நடிக்கும் இவர் கதையின் தேவைக்காக உண்மையிலேயே மொட்டை அடித்திருக்கிறார்.

அழகை பேணும் திரையுலகில் ரோகிணியின் துணிச்சல் மிக அ‌ரிதானது. அவரை மொட்டை போட சம்மதிக்க வைத்த மிஷ்கினின் கதையும் அதேபோல் அ‌ரிதானதாகவே இருக்கும் என நம்புவோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்