ஏப்ரல் 14 சுல்தான் தி வாரியர்!

புதன், 7 ஜனவரி 2009 (21:31 IST)
ரஜி‌‌‌னியை வைத்து சுல்தான் தி வாரியர் எனும் அனிமேஷன் படம் எடுத்துவரும் அவரது மகள் செளந்தர்யா, அடுத்த வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

செளந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவும், அட்லாப்ஸும் இணைந்து சுமார் 60 கோடி செலவில் இப்படத்தை எடுத்து வருகிறது.

சு‌ல்தா‌ன் ‌தி வா‌ரிய‌ர் பட‌த்‌தி‌‌ற்கு ஏ.ஆ‌ர். ரஹ்மான் இசையமை‌த்து‌ள்ளா‌ர். பாட‌ல்க‌ள் அனை‌த்தையு‌ம் க‌வி‌ப்பேரரசு வைரமுத்து எழு‌தியு‌ள்ளா‌ர். கலை தோட்டாதரணி.

அஞ்சாதே படத்தில் ஹீரோயினாக நடித்த விஜயலட்சுமி, இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

முழு நீள 3டி அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டுவரும் சுல்தான் தி வாரியர், இந்தியாவில் முதல் கிரஃபிக்ஸ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ள இந்தப் படம், 100க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைக்கு வரவுள்ளது என்பது கூடுதல் தகவல்.

வெப்துனியாவைப் படிக்கவும்