திருமணமும் நடிகைகளும்!

புதன், 7 ஜனவரி 2009 (21:04 IST)
ரசிகர்களை தவிக்க விட்டுவிட்டு போவதே இந்த நடிகைகளுக்கு வேலையாகிவிட்டது. ஒன்றிரண்டு படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள்.

பின் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும்போதே சட்டென்று திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரே‌லியாவுக்கோ, அமெரிக்காவுக்கோ சென்று செட்டிலாகிவிடுவார்கள்.

திருமணம் நல்ல விஷயம்தான். ஆனால் திடுதிப்பென்று போவதுதான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

சமீபத்தில் விந்தியா, மாளவிகா. திமிரு படத்தில் அதிரடியாய் பயம் காட்டிய ஸ்ரேயா ரெட்டி விஷாலின் அண்ணனை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.

அதேபோல் கனிகா, கோபிகா, அம்முவாகிய நான் படத்தில் நடித்த பாரதி. அவரைத் தொடர்ந்து மகேஸ்வரி, சுவாதி, சமிக்சா மற்றும் மீரா வாசுதேவன் போன்றவர்களும் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள்.

அதேபோல் தற்போது மதுமிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஷிவபாலாஜினைய மணக்கிறார். தற்போது இயக்குனர் அமீருக்கு ஜோடியாக, சுப்ரமணியசிவா இயக்கும் யோகி. நவ்தீப் ஜோடியாக, முரளி அப்பாஸ் இயக்கும் சொல்ல சொல்ல இனிக்கும் ஆகிய படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு இல்லற வாழ்க்கையில் இணையவிருக்கிறார் மதுமிதா. எங்கே போகப் போகிறார்கள்? சில ஆண்டுகளுக்குப் பின் அம்மா வேடத்துக்கு வருவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்