சீமானின் கோபம் அல்லது புரட்சி!

திங்கள், 23 ஜூன் 2008 (19:32 IST)
பிஸியாக இருக்கிறது சீமானின் வளசரவாக்கம் அலுவலகம். வாழ்த்துகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் கதை விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் சீமான்.

இரண்டுமே சிவப்பு சிந்தனையில் தோய்ந்த கதைகள். ஒன்றின் பெயர் கோபம். இன்னொன்றின் பெயர் புரட்சி.

கதை விவாதத்துடன் தயாரிப்பாளர் தேடலும் நடக்கிறது. முதலில் வருவது கோபமா அல்லது புரட்சியா என்பது பணம் போடும் தயாரிப்பாளர்களின் சாய்ஸ்.

தம்பி வெற்றிக்குப் பிறகு அண்ணன் சீமான் என்று பிஸினாக ஒட்டிக்கொண்ட மாதவன், வாழ்த்துகள் தோல்விக்குப் பிறகு தூசு தட்டி கிளம்பிவிட்டார். அதனால் தனது புதிய படத்துக்கு ஜீவாவிடம் கால்ஷீட் கேட்க தீர்மானித்துள்ளார் சீமான்.

வெப்துனியாவைப் படிக்கவும்