மலேசியா - தமிழின் சரணாலயம்!

சனி, 10 மே 2008 (16:53 IST)
மலேசியா தமிழ் சினிமாவின் சரணாலயமாக மாறி வருகிறது. அழகான லோகேஷன்கள், கெடுபிடியில்லாத கவர்ன்மெண்ட், நினைத்தால் சென்று வரும் தூரம் இவையெல்லாம் தமிழ் சினிமாவை ரொம்பவே கவர்ந்திருக்கிறது.

எஸ்.வி. சேகர் தனது வேகம் படத்தை முழுக்கவே மலேசியாவில் எடுத்தார். பிறகு பில்லா அங்கு ¥ட் செய்யப்பட்டது. தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் குருவி படத்தின் பல காட்சிகள் மலேசியாவில்தான் எடுக்கப்பட்டன.

அஜித், விஜயைத் தொடர்ந்து சூர்யாவும் மலேசியா பறக்கிறார். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அயன் படத்தின் சில காட்சிகள் மலேசியாவில் எடுக்கப்படவுள்ளது.

வாரணம் ஆயிரம் படப்பிடிப்பு முடிந்தபின் இம்மாத இறுதியில் மலேசியா செல்கிறது அயன் யூனிட்.

வெப்துனியாவைப் படிக்கவும்