புதிய ஹீரோக்களை வரவேற்கும் தமிழ் சினிமா!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (19:57 IST)
முன்னணி ஹீரோக்கள் கேட்கும் கோடி கோடியான சம்பளம் ஒரு பக்கம் என்றால், இரண்டு ஆண்டுகள் காத்திரு, மூன்று ஆண்டுகள் காத்திரு என்று மேவறு அலைகழிப்பார்கள்.

இதனால் பல பெரிய இயக்குனர்கள் கூட நொந்து போயுள்ளனர். அப்படி 'நியூ' கதையை வைத்துக்கொண்டு பல ஹீரோக்களிடம் கதை சொல்லி யாருமே நடிக்க முன்வராததால்தானே ஹீரோவாக நடித்து ஹிட்டும் கொடுத்தார் எஸ்.ஜே. சூர்யா.

இப்படி, சம்பளம், காத்திருப்பு எல்லாம் அவஸ்தையை கொடுக்க 'ஜோடி' பட இயக்குனர் பிரவின்காந்த் 'துள்ளல்' படத்தில் ஹீரோ ஆனார். பின் சுந்தர் சி, வேலு பிரபாகரன், அமீர். தற்போது மிஸ்கின் வரை ஹீரோக்களாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஐந்து வாங்கிய அஜித் எட்டு கோடியிம், மூன்று கோடி வாங்கிய சூர்யா 5 கோடியும், இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடி கேட்க தனுஷும் திட்டமிட்டிருக்கின்றனர். இப்படி சம்பளம் உயர்ந்துகொண்டே செல்வதால் சில கம்பெனிகள் புதுமுகங்களை தேடி வருகிறது.

அழகான ஆண்கள் பெரிய கம்பெனிகளுக்கு ஆல்பத்துடன் அணுகவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்