ரஜினியை குறிவைக்கும் ரக்சன வேதிகா!

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (19:22 IST)
ஐந்து கோடி கன்னடர்களை உதைக்க வேண்டும் என்று கூறவில்லை, இரு மாநிலங்களிடையே வன்முறையை தூண்டிவிடுபவர்களைத்தான் உதைக்க வேண்டும் என்றேன் என்ற ரஜினியின் விளக்கத்தை ஒகேனக்கல் பிரச்சனையின் ஆணிவேரான ரக்சன வேதிகா அமைப்பு ஏற்கவில்லை.

அதன் மாநில நிர்வாகி ஒருவர் கூறும்போது, ரஜினி நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்த் திரையுலகினரும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதுவரை கர்நாடகத்தில் நுழைய ரஜினியை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

தமிழர்கள் தாக்கப்பட்டதாக ரஜினி கூறியது தவறு, அப்படியொரு சம்பவம் கர்நாடகாவில் நடக்கவே இல்லை என கட்டு சோற்றுக்குள் கஜேந்திரனை மறைக்கும் விதமாக மேலும் ஒரு நிர்வாகி கூறியுள்ளார்.

மழை நின்றாலும், இந்த தூவானம் அடங்க சிறிது நாட்களாகும்!

வெப்துனியாவைப் படிக்கவும்