ராமனின் ஐந்தாவது சீதை!

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (18:47 IST)
ஜெகன்ஜியின் ராமன் தேடிய சீதையில் மூன்று நாயகர்கள். சேரன், பசுபதி மற்றும் நிதின் சத்யா. கதாநாயகிகள் நான்கு பேர். ரம்யா நம்பீஸன், விமலாராமன், கார்த்திகா கடைசியாக நவ்யா நாயர்.

நவ்யா நாயருக்கு இதில் கெளரவ வேடம். மோசர் பேர் நிறுவனத்தின் புதிய படத்தில் நவ்யா ஹீரோயினாக நடிக்கிறார். அதனால்தான் நான்கு ஹீரோயின் கதையல் கெளரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார் (ராமன் தேடிய சீதையையும் மோசர் பேர் நிறுவனமே தயாரிக்கிறது).

திடீர் திருப்பமாக ஐந்தாவது நாயகியாக கஜாலாவை ஒப்பந்தம் செய்துள்ளார் ஜெகன்ஜி. பிற நான்கு நடிகைகளையும் போல் கஜாலாவும், கதையில் திருப்புமுனை உண்டாக்கும் கேரக்டரில் நடிக்கிறேன் என்றார்.

சீதைகளின் எண்ணிக்கை இத்துடன் நிற்குமா, இல்லை தொடருமா?

வெப்துனியாவைப் படிக்கவும்