அருவியில் ப்ரியாமணி குளியல்!

வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (19:19 IST)
webdunia photoFILE
'பருத்தி வீரன்' முத்தழகு இமேஜை சுத்தமாக துடைத்தெறிய வேண்டும் என்ற ஆவேசத்தில் இருக்கிறார் ப்ரியாமணி. 'மலைக்கோட்டை' படத்தில் ஆத்தா ஆத்தோரமா வாறியா... என அவர் போட்ட போடலில் பாதி இமேஜ் பஞ்சாகப் பறந்துவிட்டது.

மீதி இமேஜ் 'தோட்டா' வந்தால் சிதறிவிடும் என்கிறார்கள்.

ஜீவனுடன் நடிக்கும் இந்தப் படத்தில் இயக்குனர் கேட்டதற்கு மேல் கவர்ச்சியை வாரி இறைத்திருக்கிறாராம் ப்ரியாமணி. அவரது ஆர்வத்தைப் பார்த்த இயக்குனர் ஷூட்டிங்கிற்கு கேரளா சென்றபோது, சாலக்குடி அருவியில் ப்ரியாமணியை நனையவிட்டு சில காட்சிகள் எடுத்திருக்கிறார்.

இது கதையுடன் வரும் காட்சியா இல்லை பாடல் காட்சியா என்பது மர்மமாக இருக்கிறது. எதுவாக இருந்தாலும் இந்தக் காட்சிதான் படத்திற்கு மோட்சம் தரும் என யூனிட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்