கவுன்சில் தலையீட்டால் தொடரும் படப்பிடிப்பு

ஜீவன், ப்ரியா மணி, மல்லிகா நடிக்க தோட்டா என்ற படம் எடுக்கப்பட்டது. இப்படத்தை நான் அவனில்லை படத்தின் இயக்குனர் செல்வா இயக்கினார்.

தயாரிப்பாளரின் நிதி பற்றாக்குறையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது ஜீவனும், ப்ரியாமணிக்கும் நல்ல மார்க்கெட் இருப்பதால் தயாரிப்பாளர் பணத்தை புரட்டி படத்தை
ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஜீவனும், ப்ரியா மணியும் கூடுதல் சம்பளம் கேட்க கவுன்சிலுக்கு பஞ்சாயத்து
போனது. ஏற்கனவே ஒப்பந்தமான அதே சம்பளத்திற்கு நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கவுன்சில் ஜீவனுக்கும் ப்ரியாமணிக்கும் உத்தரவு போட்டுவிட்டது.

ஆகஸ்டில் தோட்டா படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்