எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிடித்த கதை

webdunia photoFILE
எஸ்.ஜே. சூர்யா தன் கையில் இரண்டு மூன்று ஸ்கிரிப்ட் வைத்திருந்தாலும் பிரபாகர் என்பவர் சொன்ன வில் படத்தின் கதை ரொம்பவே பிடித்து போனதாம்.

பிரபாகர் இயக்கத்தில் சூர்யா நடிக்க, நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி வில் படத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சக்ரவர்த்தி இப்படத் தயாரிப்பிலிருந்து பின்வாங்கிவிட்டார்.

இதனால் சூர்யா புலி படத்தை முடித்துவிட்டு தானே இந்த படத்தை தயாரித்து நடிக்கப் போகிறாராம். அந்த அளவிற்கு வில் படத்தின் கதை அவருக்கு பிடித்திருக்கிறதாம்.

ஊனமுற்ற இளைஞனாக வரும் கதாநாயகனின் கதாபாத்திரம் பிரமாதமாக சொல்லப்பட்டிருக்கிறதாம்.

அஜீத்துக்கு வாலி படத்தைப் போன்று தனக்கு இந்தப் படம் அமையும் என்பதால் எஸ்.ஜே. சூர்யா அந்தப் படத்தை தானே தயாரிக்க முன்வந்திருக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்