மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் த‌ள்‌ளி வைப்பு

சனி, 27 டிசம்பர் 2008 (14:20 IST)
மத்திய பணியாளர் தேர்வாணையம் 2009 ஜனவரி 4ஆம் தேதி முதல் நடத்தவிருந்த 2008 கம்பைன்டு கிராஜுவேட் லெவல் மெயின் தேர்வுகளை நிர்வாக காரணங்களுக்காக 2009 பிப்ரவரி மாதத்தி‌ற்கு த‌ள்‌ளி வைத்துள்ளது.

அத‌ன் ‌‌விவர‌ம் :

Scheme B - Paper I & II - 21.02.2009

Scheme A - Paper 1 & II - 22.02.2009

Paper III & IV - 28.02.2009

Paper V - 01.03.2009

தேர்வாணையத்தால் புதிய நுழைவுச் சீட்டுகள் போட்டியாளருக்கு விரைவில் அனுப்பப்படும். இது குறித்த மற்ற விவரங்களை போட்டியாளர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.sscsr.gov.in) தெரிந்து கொள்ளலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்