இந்தியாவில் போட்டிகள் நடைபெறும் 8 நகரங்களுக்கு டி20 உலகக் கோப்பை எடுத்துச் செல்லப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், பவன் நெகி ஆகியோரும், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த சிறுவர்களும் பங்கேற்றனர். அவர்கள் டெல்லி நகர் முழுவதும் நேற்று சுற்றி வந்தனர்.
அப்போது, பிசிசிஐ சார்பில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் டீம் ஸ்வாச் என்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யுவராஜ் சிங், பவன் நெகி ஆகியோர் சிறுவர்களுக்கு கிரிக்கெட் தொடர்பான ஆலோசனைகளை அளித்ததோடு மட்டுமின்றி துப்புரவின் முக்கியத்துவம் குறித்தும், திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர்.
இதற்கு அடுத்தப்படியாக, டி20 உலககோப்பை கொல்கத்தா, நாகபுரி, சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.