இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலங்கையை எளிதில் வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
இதையடுத்து துணை கேப்டன் ரஹானே களமிறங்கினார். புஜாரா, ரஹானே இருவரும் சேர்ந்து நிலைத்து ஆடினர். இருவரும் சதத்தை கடந்தனர். மேலும் இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். புஜாரா 128 ரன்களுடனும், ரஹானே 103 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.