ஆசிய கோப்பை டி-20: மலேசிய அணியை வீழ்த்திய இந்தியா !

திங்கள், 3 அக்டோபர் 2022 (21:44 IST)
ஆசியக் கோப்பை –டி-20 போட்டியில், டக்வொர்த்  லூயிஸ்  முறையில்  மலேசிய அணியை வீழ்த்தியது இந்திய அணி.

ஆசிய கோப்பை பெண்கள் டி-20 கிரிக்கெட் போட்டில் தற்போது  வங்கதேச நாட்டில் நடந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் தனது வெற்றியைப் பதிவு செய்து வரும் இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வென்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மலேசிய அணி முதலில் பந்து வீசியது. இதனால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது, மலேசியாவுக்கு 181 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்ததது.

இதையடுத்து பேட்டிங் செய்த மலேசிய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், 5.2 வது ஓவரில் மழைகுறுக்கிட்டதால், எனவே, டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசாத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Edited by Sinoj
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்