அமெரிக்க மாகாணமான ஃபளோரிடாவைச் சேர்ந்த ஒருவர், போக்கிமான் கோ விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்த இரு பதின்ம வயது நபர்களை திருடர்கள் என சந்தேகித்து, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இரவு நேரத்தில், ஒர்லாண்டோவின் வட கிழக்கு பகுதியில் உள்ள பனை மர கடற்கரை பகுதியைச் சுற்றி வந்துக் கொண்டிருந்த அந்த பதின்ம வயது நபர்களை, தனது வீட்டின் வெளியே கண்டார் அந்த மனிதர்.