அனைத்து பாடங்களிலும் முதல் இடத்தில் வந்த 17 வயதான ரூபி ராய், மறு தேர்வின் போது தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
வீடியோ ஒன்றில், அரசியல் அறிவியல் பாடத் திட்டத்துக்கான வார்த்தையை சரியாக எழுத்துக் கூட்ட முடியாமல் திணறிய ரூபி ராய், அது சமையல் தொடர்பான பாடம் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோவை தொடர்ந்து, ரூபி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.