எனினும் ஆஸ்திரேலிய அரசின் இந்தப் புதிய கொள்கையானது, பத்து வயதுக்கும் மேற்பட்டு, ஆஸ்திரேலிய நிலப் பரப்போ அல்லது பாப்வா நியூகினி மற்றும் நவ்ரூவிலுள்ள தடுப்பு முகாம்களிலோ உள்ளவர்களுக்குப் பொருந்தாது.
கடந்த சில ஆண்டுகளாக, அகதித் தஞ்சம் கோரும் நோக்கில், படகில் வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்ததை அடுத்து, தஞ்சம் கோரிகள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை ஆஸ்திரேலியா மேலும் கடுமையாக்கியது குறிப்பிடத்தகுந்தது.