ஏடிஸ் வகை கொசுக்களால் பரவக்கூடிய ஸிகா வைரஸ் பிரேசிலில் இருந்து மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கும், கரீபியன் நாடுகளுக்கும் வேகமாக பரவியது. பின்னர், உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. தற்போது, அந்த வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
டொமினிக்கன் குடியரசு நாட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு சென்று வந்துள்ள 36 வயதான ரஷிய கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஸிகா வைரஸ் தாக்கி உள்ளதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட நிலையில் பிறருக்கு பரவாத வகையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். இந்த ரஷிய சுகாதார மந்திரி வெரோனிக்கா நேற்று உறுதி செய்துள்ளார்.