எஸ்கலேட்டரில் சிக்கி உயிரிழந்த இளம்பெண் : பரபரப்பு வீடியோ

திங்கள், 27 ஜூலை 2015 (12:23 IST)
சீனாவில் குழந்தையுடன் ஷாப்பிங் செய்ய கடைக்கு வந்த பெண் ஒருவர், எஸ்கலேட்டர் எந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
 

 
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹூபேய் மாகாணத்தின், ஜிங்ஷுவ் நகரில் 30 வயது இளம்பெண் ஒருவர், தனது கைக்குழந்தையுடன் பொருட்கள் வாங்கிச் செல்ல அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலிற்கு வந்துள்ளார்.
 
அப்போது, கீழ் தளத்திலிருந்து, மேல் தளத்திற்காக செல்வதற்காக, குழந்தையுடன் நகரும் படிக்கட்டு மூலம் [Escalator] ஏறிச் சென்றுள்ளார். மேல்தளத்தை அடைந்தபோது, அதிலிருந்து இறங்க முயற்சி செய்தபோது, நகரும் படிக்கட்டு எந்திரத்தின் முகப்பு பகுதி, உடைந்து விழுந்தது.
 
உடனே அந்த பெண் தனது குழந்தையை தள்ளிவிட்டார். ஆனால், அந்த இளம்பெண், அந்த நகரும் படிக்கட்டிற்குள் சிக்கிய, அந்த பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார். பின்னர் அந்த பெண்ணின் உடல் எஸ்கலேட்டர் எந்திரத்தின் உள் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
 
வீடியோ:

வெப்துனியாவைப் படிக்கவும்